Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ளம் ஊருக்குள் புகுவதைத் தடுக்க சுமார் ஒரு லட்சம் மணல் மூட்டைகள் தயார்

செப்டம்பர் 10, 2019 08:20

கும்பகோணம்: கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

இதனால் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரிக்கு 9 ஆயிரம் கன அடியும், தஞ்சை வழியே பாயும் கல்லணைக் கால்வாயில் 2 ஆயிரத்து 500 கன அடியும், சென்னை உள்ளிட்ட நகரங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்ககாக கொள்ளிடத்தில் 18 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவிரியில் நீர், இரு கரைகளையும் அணைத்தவாறு பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே தஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பட்டால் வெள்ள அபாயத்தைத் தடுக்க கும்பகோணம் காவிரி, மற்றும் அரசலாறு பாயும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை சார்பில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மணஞ்சேரி கலுங்கு பகுதியில் காவிரியின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்வதால் வெள்ள ஏற்பட்டு கிராமத்திற்குள் நீர் புகாமல் தடுக்க ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் தயாராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்